Wednesday, July 25, 2012

இன்னைக்கு நான் ஒரு சந்தோசமான விஷயத்தை உங்களோட பகிர்ந்துக்க போறேன்...!!!

மக்களே...!!!

                                  

இன்னைக்கு நான் ஒரு சந்தோசமான விஷயத்தை உங்களோட பகிர்ந்துக்க போறேன்...!!!

நம்ம உயிர்நுட்பம் வலைப்பூ வெற்றிகரமா ஐந்தாயிரம் கவுண்ட்ஸ் கடந்திருக்கு. பிரபலமான பல வலைபூக்கள் மத்தியில இது பெரிய விஷயம் இல்லைதான். ஆனாலும், அறிவியல் பத்தி எழுதற வலைப்பூவுக்கு, அதுவும் ஆரம்பிச்சி நாலே  மாசம் ஆன வலைப்பூவுக்கு இது கண்டிப்பா பெரிய விஷயம். 

இதுக்கு எல்லாம் இந்த வலைப்பூவுக்கு தொடர்ந்து நீங்க குடுக்கற ஆதரவு தான் காரணம். இதே ஆதரவை நான் உங்ககிட்ட இருந்து தொர்ந்து எதிர்ப்பார்க்கிறேன். அதோட என்னோட எழுத்துல இருக்கிற நிறை குறைகளை கண்டிப்பா சுட்டி காட்டுங்க. மாத்திக்கறேன்.

இந்த சந்தோசமான தருனத்தில நம்ம வலைப்பூவுக்கு ஒரு நல்ல அறிமுகத்தை வாசகர்கள் மத்தியில ஏற்படுத்தி குடுத்த ஜாக்கி அவர்களுக்கும், கேபிள் சங்கர் அவர்களுக்கும், இன்னொருத்தர் இருக்கார்... சதிஸ் மாஸ்... என்னோட வலைப்பூவுக்கு லிங்க் எல்லாம் குடுத்து அவரும்  நம்ம வலைப்பூவுக்கு அறிமுகம் ஏற்படுத்தி குடுத்தார். ஸோ, சதீஷ் மாஸ் அவர்களுக்கும், இன்னொரு முக்கியமான ஒருத்தர் நல்ல மாட்டுக்கு ஒரு ஊசி அப்படிங்கற பேர்ல எழுதற டாக்டர் டூ லிட்டில். இவரும் பயாலாஜி தெரிஞ்சவர் அப்படிங்கறதால இவரோட ஆலோசனைகள் எனக்கு ஒரு பெரிய பலம். இவருக்கும் என்னோட நன்றிகளை தெரிவிச்சிக்கறேன். 

இந்த நாலு மாசத்தில நம்ம வலைப்பூ ஐந்தாயிரம் கவுண்ட்ஸ், இன்டலியில 13 பின்தொடர்பவர்கள், 28 நேரடி பின்தொடர்பவர்களோட ஒரு நல்ல நிலைமையை அடைய மேல சொன்னவங்க மிக மிக முக்கியமான காரணம். 

அப்புறம் நான் நன்றி சொல்ல வேண்டியவங்க நம்ம பின்தொடர்பவர்கள். இவங்களோட கமெண்ட்ஸ், ஒரு அறிவியல் பத்தின  வலைப்பூவுக்கு இவங்க தொடர்ந்து குடுக்கிற ஆதரவு என்னை சோர்ந்து போகாம எழுத செய்யிது. நான் எழுதறனோ, எழுதலையோ, தினமும் வந்து பார்த்திட்டு போற இவங்களுக்காகவாவது எழுதணும் அப்படிங்கற எண்ணம் நம்ம வலைப்பூவை ஒரு நல்ல இடத்துக்கு கொண்டு வந்திருக்கு. அதே போல நெறைய பேரு பின்தொடர்பவர்கள் இல்லன்னாலும், நம்ம வலைப்பூவை தினமும் வாசிக்கறாங்க அப்படிங்கறதையும் புரிஞ்சி தான் வெச்சிருக்கேன். ஸோ... மக்களே...!!! எல்லாருக்கும் என்னோட நன்றிகள்.

தொடர்ந்து படிங்க. பல புதிய பகுதிகள், புதிய விசயங்களோட பதிவுகள் அப்படின்னு இன்னும் நல்ல, பயனுள்ள வலைப்பூவை உங்களுக்கு கொடுக்க என்னாலான எல்லாத்தையும் செய்யிறேன். இந்த நாளை, சந்தோசமா நண்பர்களுக்கு இனிப்பு குடுத்து கொண்டாட போறேன். நீங்களும் கலந்துக்கோங்க. அடுத்த பதிவுல சிந்திக்கலாம். 

No comments:

Post a Comment