மக்களே...!!!
சென்னையில் உள்ள ஐஐடியில் இரண்டு மாத உதவித்தொகையுடன் கூடிய கோடைக்கால பயிற்சி ஆராய்ச்சி திட்டம் - 2013 அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி தேர்வாகும் மாணவர்களுக்கு நல்ல உதவித்தொகையும் வழங்கப்படும். மாணவர்களுக்கு இடையே ஆராய்ச்சி குறிந்த ஆர்வமும் விழிப்புணர்வும் உண்டாக்கவும், இதன் மூலம் சரிந்து வரும் ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கையை கூட்டவும் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம், வணிகம், மேலாண்மை மனிதநேயவியல் மற்றும் அறிவியல் துறையை சேர்ந்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் - பிப்ரவரி 18, 2013.
தேர்வாகும் மாணவர்கள் சென்னை ஐஐடியை சேர்ந்த பேராசிரியர்களின் மேற்பார்வையில் சிறிய அளவிலான இரண்டு மாத ஆராய்ச்சி திட்டத்தில் வேலை செய்ய பணிக்கப்படுவார்கள்.
இத்திட்டத்திற்கு 3வது ஆண்டு B.E/B.Tech/B.Sc (Eng) / Integrated M.E/M.Tech. அல்லது முதல் வருட ME/M.Tech/M.Sc./M.A, MBA மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆனால் ஏற்கனவே ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க அனுமதி, தகுதி இல்லை.
சென்னை ஐஐடியில் உள்ள Aerospace
Engineering, Applied Mechanics, Bio Technology, Chemical Engineering,
Civil Engineering, Computer Science & Engineering, Engineering
Design, Electrical Engineering, Mechanical Engineering, Metallurgical
& Materials Engineering, Ocean Engineering, Physics, Chemistry,
Mathematics, Humanities & Social Sciences, Management Studies துறைகள் இந்த திட்டத்தில் இணையவுள்ளன. இதன்படி தேர்வாகும் மாணவர்கள் அவரவரது பின்புலத்திற்கு ஏற்ப மேற்குறிப்பிட்ட துறைகளில் ஆராய்ச்சியை மேற்கொள்ள பணிக்கப்படுவார்கள்.
மேலதிக தகவல்களுக்கு http://www.iitm.ac.in/iitm-summer-fellowship-programme-2013 இந்த லிங்க்கை பின்தொடரவும்.
திட்டத்தின் காலம் - 2 மாதங்கள். மாணவர்கள் தான் துவங்கும் ஆராய்ச்சி திட்டத்தை இரண்டு மாதத்திற்குள் முடித்து தர வேண்டும். இவர்களுக்கு மாதம் ரூ. 6, 500/- என்ற கணக்கில் இரண்டு மாதங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
ஸோ... மக்களே உங்களுக்கு தெரிஞ்சவங்க இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களாக இருந்தால் அவங்களுக்கு தெரிவியிங்க. இல்ல நீங்களே விண்ணபிக்க முடியும்ன்னா கண்டிப்பா முயற்சி பண்ணுங்க. எனது வாழ்த்துக்கள். அடுத்த பதிவில் சிந்திப்போம்...!!!
No comments:
Post a Comment