Monday, February 4, 2013

சில சுவாரஸ்யங்கள்: கோழி முட்டையின் அறிவியல் பூர்வமான கட்டமைப்பு - 2

மக்களே...!!!

DR. DOLITTLE நம்ம வலைப்பூவை தொடர்ந்து படிக்கிற வாசகர். இவர் ஒரு மிருக நல டாக்டரும் கூட. நன் எழுதறதை படிச்சிட்டு தன்னோட கருத்துக்களையும், தனக்கு தெரிஞ்ச புது விசயங்களையும் அப்பப்போ சொல்லுவார். நல்ல மாட்டுக்கு ஒரு ஊசி அப்படிங்கற பேர்ல ஒரு வலைப்பூவை எழுதிட்டு இருக்கார். நம்மளோட வலைப்பூவில வந்த கோழி முட்டை - அறிவியல் பூர்வமான கட்டமைப்பு  பதிவு படிச்சிட்டு சில மேலதிக சுவாரஸ்யமான தகவல்களை கமெண்ட்ல சொல்லியிருக்கார். நன்றி டாக்டர்...!!! அவர் சொன்ன சில விஷயங்கள் சுவாரஸ்யமாவும் இருந்ததால அதையும் ஒரு பதிவா போடலாம்னு தோணுச்சி. ஸோ, இன்னைக்கு பதிவு டாக்டர் சொன்ன தகவல்கள் தான். வாங்க இன்னைக்கு பதிவுக்கு போகலாம்.  

 தகவல் - 1

மனிதர்கள்ல பெண்களில் பாலின குரோமோசோம்கள் ஒரே மாதிரி இருக்கும். அதாவது XX. இதை HOMOGAMETIC - ஹோமோகேமிடிக் அப்படின்னு சொல்வாங்க. அதுவே ஆண்களின் பாலினம் சம்பந்தப்பட்ட குரோமோசோம்கள் XY. இதை HETEROGAMETIC - ஹெடிரோகேமிடிக் அப்படின்னு சொல்வாங்க. ஸோ, பிறக்கும் குழந்தையின் பாலினம் ஆணின் குரோமோசோம் பிரிதலை பொறுத்தே அமையும். கொஞ்சம் விளக்கமா வேணும்ன்னா நம்ம பழைய பதிவு ஒன்னு ரொம்ப விளக்கமாவே எழுதியிருக்கேன். அதை படிச்சி தெரிஞ்சிக்கலாம். அதுவே பறவைகள் இனத்தில் தலைகீழ். இங்க ஆண்தான் ஹோமொகேமிடிக். பெண் ஹெடிரோகேமிடிக். புதியதா உருவாகும் குட்டி பறவை ஆணா பெண்ணான்னு பெண் தாய் பறவையின் குரோமோசோம் பிரிதலை பொறுத்தே அமையும். 


                              (படத்து மேல கிளிக் பண்ணி பெருசாக்கி பார்க்கலாம்)


தகவல் - 2

ரெண்டாவது தகவல், இன்னும் கொஞ்சம் வித்தியாசமானது. மனிதர்களில் செல்களில் உருவாகும் கழிவு பொருள்களை வெளியேற்றுவதில் முக்கியமான வழி சிறுநீர் உருவாக்கி அது மூலமா வெளியேற்றுவது. மனித செல்கள் எல்லா கரிம வேதிப்பொருள்களை உபயோகப்படுத்திட்டு மிஞ்சியவற்றை கண்டிப்பா வெளியேத்தணும். அப்படி வெளியேத்த மீதி இருக்கிற கரிம வேதிப்பொருள்களை யூரியா - UREA அப்படிங்கற கரிம வேதிப்பொருளா மாத்தி அதை அப்படியே ரத்தத்துல கலக்கவிடும். அப்படி கலக்கிற யூரியா சிறுநீர் பிரியும் போது சிறுநீர்ல கலந்து சிறுநீர் வழியா வெளியேற்றப்பட்டு விடும். இதை வீடியோல நீங்க பார்க்கலாம். 



ஆனா, பறவைகள்ள இது வழக்கம் இல்லை. பறவை செல்கள் வெளியேற்றும் யூரியா அப்படியே வெளியேற்றப்படுவதில்லை. அதை அப்படியே URIC ACID - யூரிக் ஆசிட்டாக மாற்றப்பட்டு அதை அப்படியே வெளியேற்றிடும். பறவைகளில் தனியா சிறுநீர் அப்படின்னு ஒன்னு உருவாகறதில்லை. 

இதுக்கு என்ன காரணம் ? யூரியா சிறுநீர்ல வெளியேற்றனும் அப்படின்னா, அது தண்ணியில கரைக்கப்பட்டு அப்புறம்தான் சிறுநீரா வெளியேறும். யூரியா தண்ணியில கரையனும் அப்படின்னா  நிறைய அளவு தண்ணி வேணும். மனித உடல்ல அதுக்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. ஏன்னா மனித உடல்ல நிறைய தண்ணி இருக்கு. ஆனா, பறவையின் உடல்ல அவ்வளவு தண்ணி எதிர்ப்பார்க்க முடியாது. பறவை செல்கள் உருவாக்கும் யூரியாவை அப்படியே சிறுநீர் வழியா வெளியேத்தினா பறவை தன்னோட சாதாரண வேலைக்கு கூட தண்ணி பத்தாம செத்து போயிடும். 

தகவல் - 3

இது முட்டை பத்தின விஷயம் தான். கோழியோட முட்டை மட்டும் இல்லை, எல்லா பறவைகளோட முட்டையோட வடிவம் பத்தி உங்களுக்கு தெரியும். ஒரு பக்கம்  குறுகலான முனையும், மறுப்பக்கம் கொஞ்சம் பெரிய வடிவமும் இருக்கும். இதுக்கும் ஒரு காரணம் இருக்கு. ஒரு கோழியோட முட்டையை எடுத்து தரையில உருட்டி விட்டு பாருங்க. அது உருட்டி விட்ட இடத்திலேயே தான் சுத்தி சுத்தி வருமே தவிர உருண்டு உங்களை விட்டு தூரமா போகாது. அதுக்கு காரணம் இந்த ஸ்பெஷல் வடிவம்தான் காரணம். 

அவ்ளோதான் மக்களே...!!! படிங்க. பின்னூட்டம் போடுங்க. இந்த தகவல்களை சொன்ன டாக்டருக்கு மறுபடியும் ஒரு பெரிய நன்றி. மறுபடியும் அடுத்த பதிவுல சிந்திப்போம்.










No comments:

Post a Comment