Tuesday, March 26, 2013

தொடர்: பரிணாமம் - EVOLUTION: பூமியின் தோற்றம் - FORMATION OF EARTH - 1

மக்களே...!!!

கொஞ்ச நாளாவே கவனிச்சிட்டு வரேன். நம்ம வலைப்பூவை படிக்கும் வாசகர்களோட எண்ணிக்கை கணிசமான அளவுக்கு கூடியிருக்கு. ஒரு நாளைக்கு சராசரியா 200 தடவை நம்ம வலைப்பூ படிக்கப்படுகிறது. அமெரிக்கா மாதிரியான மேற்கத்திய நாடுகள் மட்டும் இல்லாம, டெல்லி, மகாராஷ்டிராவிலயும், ஈரோடு, சிவகாசி, சேலம், கன்னியாகுமரி என கடைக்கோடி தமிழகம் வரை எல்லா பகுதிகள்ல இருந்தும் வாசகர்கள் படிக்கிறாங்க. ஒரு சினிமாவோ, இல்லை அரசியலோ அல்லது கதை கவிதை அப்படின்னு எந்த ஒரு என்டர்டெயின்மென்ட்டும் இல்லாத, முழுமையான அறிவியல் பேசும் வலைப்பூவுக்கு இந்த வரவேற்பு உணமையிலேயே மிகப்பெரியது தானே. இதையெல்லாம் பார்க்கும்போது உங்க ஆர்வத்துக்கு தீனி போடக்கூடிய அளவுக்கு நெறைய எழுதனுமே அப்படிங்கற கவலை வர ஆரம்பிச்சிடுச்சி. முடிஞ்ச வரை நெறைய எழுத முயற்சி பண்றேன். இன்னைக்கு நான் ரொம்ப நாள் முன்னாடியே எழுதறதா அறிவிச்ச தொடர் '' பரிணாமம் '' ஆரம்பிக்கிறதா இருக்கேன். இந்த தொடர், எதோ அறிவிச்சோம், எழுதினோம்ன்னு இல்லாம ஒரு முழுமையான, அனைத்து விதமான தகவல்களை உள்ளடக்கின முழுமையான தொடரா இருக்கணும் அப்படிங்கறது என்னோட திட்டம். ஆனா, தேவையான அளவுக்கு தகவல்களை சேகரிக்க போதிய நேரமின்மை, என்னோட சோம்பேறித்தனம் இப்படி சில பல காரணங்களால அப்புறம், அப்புறம்ன்னு தள்ளிப்போட்டுட்டே வந்தேன். ஒரு வழியா இன்னைக்கு ஆரம்பிச்சிட்டாச்சி. வாங்க இன்னைக்கு பதிவுக்கு போகலாம்.

பரிணாமம் பத்தி எழுதணும் அப்படின்னா நேரிடையா பரிணாமம் பத்தி மட்டும் சொல்லிட்டு சொல்லிட முடியாது. ஏன்னா, பின்னாடி நமக்கு வரக்கூடிய சந்தேகங்களுக்கு பதில் கிடைக்காது. ஒரு விஷயத்தை பத்தி முழுமையா தெரிஞ்சிக்கணும் அப்படின்னா அந்த விஷயம் மட்டும் இல்லாம அதனோட தொடர்புடைய எல்லா விசயங்களையும் கண்டிப்பா தெரிஞ்சிக்கணும். அப்போ தான் அந்த தகவல்கள் முழுமை அடையும். இந்த வகையில் - பரிணாமம் அப்படின்னா அது வெறும்  இந்த பூமியில் உள்ள உயிரினங்களோட பரிணாமம் மட்டும் இல்லாம அதனோட தொடர்புடைய இந்த பூமி, தண்ணீர், காற்று, வேதிப்பொருட்கள், காடு, மலைன்னு ஒரு சின்ன துரும்பு கூட விடாம அத்தனையும் நாம பார்க்கணும். தெளிவா சொல்லனும்னா உயிரினங்கள் அதனோட பரிணாமம் அப்படின்னு சொல்லனும்னு அது எப்படி உருவாச்சின்னு பார்க்கணும், அதே அளவுக்கு அது உருவான இடம் எது, இடத்தோட தன்மை, அந்த இடத்துல இருந்த எது ஒரு உயிரினம் உருவாக காரணமா இருந்ததுன்னு எல்லாமே பார்க்கணும். அதுதான் ஒரு முழுமையான அலசலா இருக்கும். அதை தான் நாம இங்க பண்ண போறோம்.



பரிணாமம் அப்படின்னா என்ன? - இது தான் நமக்கு முன்னாடி இருக்கிற முதல் கேள்வி. ஒரு இனத்துக்குள்ள காலம் காலமா, பரம்பரை பரம்பரையா இருந்துவர குணத்தில் ஏற்படும் நிலையான மாற்றம். இங்க குணம் அப்படிங்கறது குறிப்பாக அந்த இனத்துக்குன்னு இருக்கும் தோற்றத்தை குறிக்கும்.  அப்படி உருவாகிற மாற்றத்துக்கு என்ன வேணும்னாலும் காரணமா இருக்கலாம். முக்கியமா, திடீர்ன்னு உருவாகும் அந்த மாற்றம் காலப்போக்கில் அப்படியே நிலைச்சிடும்.    அடுத்த அடுத்த பரம்பரையில் தொடரும். ஸோ, ஒரு உயிரினம் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள தனக்கு தானே உருவாக்கிக்கொள்ளும் மாற்றங்கள், புது குணங்கள் இதுக்கு பேருதான் தான் பரிணாமம், பரிணாம வளர்ச்சி.


ஸோ, நாம மொதல்ல இந்த பிரபஞ்சம் அப்புறம், இந்த பூமி எப்படி உருவாச்சி அப்படிங்கறதுல இருந்து ஆரம்பிக்கலாம்.  நம்ம பூமியோட வரலாறு சரியா 4.5 பில்லியன் வருசங்களுக்கு முன்னாடியில் இருந்து ஆரம்பிக்கிறது. இந்த நாலாயிரத்தி ஐநூறு பில்லியன் (10 இலட்சம் - 1 மில்லியன், 10 மில்லியன் - 1 பில்லியன்) அப்படிங்கற வரைக்கும் நம்ம விஞ்ஞானிகள் யூகிச்சிருக்காங்க. அதுக்கு முன்னாடி எவ்வளவு வருசங்கள் அப்படியே இருந்ததுன்னு யாருக்கும் தெரியாது.

வானத்துல தான்தோன்றிதனமா சுத்திட்டு இருந்த விண்கற்கள் ஒன்னுக்கொன்னு மோதி உடைஞ்சி இப்படியே போயிட்டு இருந்த கால கட்டம். அப்போவெல்லாம் இந்த உயிர் வேதிப்பொருட்கள் கார்பன், நைட்ரஜன் இதெல்லாம் எதுவுமே கிடையாது. எரிநட்சத்திரம் அல்லது விண்கற்கள் ஒன்னுக்கொன்னு மோதிக்கிட்டப்போ எப்படியோ அதுல இருந்த வேதிப்பொருட்கள் ஒன்னுக்கொன்னு கலந்து ஒரு இடத்துல கெடைச்சிருக்கு. அப்படி வந்தது தான் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன். இப்படியே சின்ன சின்ன அளவுல நடந்திட்டு இருந்த மோதல்கள் அதன் மூலம் வெளியான வாயுக்கள் கதிர்கள் அப்படின்னு எல்லாம் சேர்ந்து எப்படியோ ஒரு நட்சத்திர மற்றும் கோள்களோட தொகுப்பை ( 200-400 மில்லியன் கோள்களும், நட்சத்திரங்களும் சேர்ந்த தொகுப்பு) உருவாக்க அதுதான் நம்ம பிரபஞ்சம். அதுல ஒரு புள்ளி தான் நம்ம சூரியனும் அதனை சேர்ந்த கோள்களும். விண்கற்களுக்குள்ள  நடந்த ஒரு பெரும் மோதல், அதனால வெளியான சக்தி எல்லாம் சேர்ந்து ஒரு நெருப்பு கோளத்தையும், அதுக்கு ஒரு ஈர்ப்பு சக்தியையும் உருவாக்க அது தான் பின்னாளில் ஒரு சூரியனா உருவெடுத்தது, அது தான் நம்ம சூரிய குடும்பத்தின் ஆரம்பம்.

சூரியனுக்கும் நம்ம பூமி மாதிரியே ஈர்ப்பு சக்தி இருக்கு. இந்த ஈர்ப்பு சக்தி வந்ததும் அதனுடைய எல்லைக்குள்ள வந்த எல்லா விண்கற்களையும் தன்னை நோக்கி இழுக்க இன்னும் ஒரு பெரிய மோதல் நடந்து அங்க. இது தான் சூரிய குடும்பத்துல இருக்கும் மத்த கோள்கள் உருவான அடிப்படை. பல மில்லியன் ஆண்டுகள் வரலாறு கொண்டது நம்ம பிரபஞ்சம் . யோசிச்சி பாருங்க பூமிக்கே 4.5 பில்லியன் வருஷம் வரலாறுன்னா சூரியனுக்கு எவ்வளவு பில்லியன் வருஷ வரலாறோ ? யாருக்கு தெரியும்?. இப்படி உருவான சூரியன்ல இருந்து மிகப்பெரிய மோதல் காரணமா உடைஞ்சி வெளிய வந்தது தான் பூமி, மத்த கோள்கள். ஆனா, பூமி அப்போ ஒரு சின்ன விண்கல் அளவுக்கு தான் இருந்ததிருக்கு. ஆனா, ஈர்ப்பு விசையோட. நம்ம பூமி மட்டும் இல்லாம நம்ம பால்வெளி மண்டலத்துல இருக்கிற மற்ற கோள்கள் கூட சூரியன்ல இருந்து விண்கற்கள் மோதின காரணமா தனியா உடைஞ்சி வந்தவை. தனியா வந்த இந்த கோள்கள் அப்போ ஒரு பெரிய உருகின கொதிக்கிற பாறைக்குழம்பு அவ்ளோதான். இப்போ கடல் முழுக்க தண்ணியா இருக்கே, அங்க தண்ணிக்கு பதிலா கொதிக்கிற நெருப்பு குழம்பா இருந்தா எப்படி இருக்கும்? அது தான் அப்போ பூமி இருந்த நிலை. வேற எதுவும் அங்க கெடையாது. கடுமையான கண்கொண்டு பார்க்க கூட  முடியாத அளவுக்கு நெருப்பு குழம்பு. மிக மிக சின்னதா இருந்த பூமி தன்னோட ஈர்ப்புவிசையை பயன்படுத்தி பக்கத்துல இருந்த சின்ன சின்ன கற்களையும், சிறு சிறு கோள்களையும் ஈர்க்க, கொஞ்சம் கொஞ்சமா பெருசா ஆனது. நம்ம ஒரு பூமி பல நூறு சின்ன சின்ன கோள்கள், எரி நட்சத்திரங்கள் சேர்ந்ததுன்னு சொல்றாங்க. இந்த மோதல்கள் காரணமா, அப்போ நம்ம பூமியில சில வேதிப்பொருள்களும் உருவாச்சி. அது கார்பன் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன். உருவான அது இப்படியே ஒரு 500-600 வருசங்கள் இருந்திருக்கு. அப்போ நம்ம பூமியில தண்ணி ஆக்சிஜன் எல்லாம் கெடையாது. பூமி சூரியன்கிட்ட ரொம்ப நெருங்கின இடத்துல இருந்தது. அதனால நம்ம பூமியே நெருப்பு கோளமாதான் இருந்தது என்ன ஒன்னே ஒன்னு மத்த விண்கற்கள் விழுந்துட்டே இருந்ததால அளவு மட்டும் பெருசா ஆகிட்டு இருந்தது. அதோட ஈர்ப்பு விசையும் ரொம்ப அதிகம்.



இப்போ அடுத்த திருப்பம் - அப்போ இருந்த சனி, இன்னொரு கோள் அளவுல ரொம்ப பெருசு - கிட்டத்தட்ட 11 மடங்கு, சூரியன்ல இருந்து ரொம்ப தள்ளி பூமிக்கு அடுத்தப்படியா இருந்தது. அதனால நெருப்பு கோளம் ஆற ஆரம்பிச்சிருந்த நிலையில நம்ம பூமி மேல வினாடிக்கு பத்து மைல் வேகத்துல வந்து மோத, நல்லா கொதிக்கிற பாறை குழம்பா இருந்த பூமி சிதறிடுச்சி. கொதிக்கிற பாறை குழம்பு மற்றும் பூமியில இருந்த வாயுக்களும் பிரபஞ்ச வெளியில சிதற, அந்த சிதறல்களை தன்னோட ஈர்ப்பு சக்தி மூலமா சனி இழுத்து கொண்டது. அது தான் இன்னைக்கு நாம சனி கிரகத்தை சுத்தி பார்க்கிற சிவப்பு வளையம். இந்த மோதல்னால நம்ம பூமிக்கு கெடைச்ச நன்மை ரெண்டு,

1. பூமி சூரியன்ல இருந்து ரொம்ப தூரம் தள்ளி வந்தது
2. பூமியில இருந்து சிதறின ஒரு துண்டு நிலாவாக மாறியது. 

முதல்ல உருவான நிலா பூமிக்கு மிக பக்கத்துல இருந்ததாம். அதனால நம்ம பூமியோட ஈர்ப்பு விசையில நெறைய மாற்றங்கள் நடந்து, இதன் காரணமா உருவான ஒரு சக்தி நம்ம பூமிக்கு மிக பலமான புவி ஈர்ப்பு விசையை உருவாக்கி குடுத்திச்சி.

இப்போ, பூமி சூரியன்ல இருந்து ரொம்ப தூரமா தள்ளி வந்ததால இப்போ பூமி நெருப்பு குழம்பு நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமா ஆற, வப்பநிலையும் குறைஞ்சிட்டே வந்தது. அதே சமயம் புவி ஈர்ப்பு விசை அதிகரிச்சதால நம்ம பூமி அண்டவெளியில சுத்திட்டு இருந்த மத்த கோள்களையும், விண்கற்களையும் ஈர்க்க, அதுவும் நம்ம பூமியில வந்து விழுந்தது. இது தான் நம்ம பூமியோட வரலாறுல நேர்ந்த அடுத்த திருப்பம்.

3900 மில்லியன் வருசங்கள் முன்பு - அது என்னன்னா அப்படி வந்து விழுந்த வின்கற்கள்ல இருந்தது என்ன தெரியுமா - உறைஞ்சி போன தண்ணீர். பனிக்கட்டி. பல நூறு வருசங்களா தொடர்ந்து வந்து விழுந்திட்டே இருந்த பனிக்கட்டி கொஞ்சம் கொஞ்சமா பூமியை நிரப்ப ஆரம்பிக்க இப்போ பூமி முழுக்க தண்ணீர். இது தான் கடல் உருவான கதை. ஆனா, மேல்பக்கம் மட்டும் தான் தண்ணி. உள்ளே ஓடிட்டு இருந்தது நெருப்பு குழம்பு. அது வெளியிடும் வாயுக்கள். இன்னும் ஒரு நூறு பில்லியன் வருடங்கள் கடக்க, இதுக்கு முன்னாடி பூமியே நெருப்பு குழம்பா இருந்ததால அதுல இருந்து வெளியேறும் வாயுக்கள் எளிதா வெளியேறிடும். இப்ப பூமியோட மேற்பக்கம் கெட்டிப்பட அதுக்கும் மேல தண்ணீர் நிரம்பி இன்னும்  கடினமாகிட்டது. இதனால உள்ளேயே தங்கிவிட்ட வாயுக்கள் ஒரு கட்டத்துல அழுத்தம் தாங்காம பீறிட்டு பூமிய உடைச்சிட்டு வெளிய வந்தது தான் எரிமலை. மலைகளும், நிலமும் உருவான கதை இது. இந்த மாதிரியான நிகழ்வுகள் ஒரு 300-400 மில்லியன் வருடங்கள் தொடர்ந்து நடத்திட்டு இருந்தது. அத்தனை வருடங்கள் தொடர்ந்து வெளியேறின பாறை குழம்புகள் எல்லாம் தண்ணி காரணமா இறுகி ஒண்ணா சேர்ந்து பின்னாளில் நிலமாக மாறியது.

இப்போ பாருங்க -

4500 மில்லியன் வருடங்கள் முன்பு  - பூமி ஏறும் நெருப்பு குழம்பு
3900 மில்லியன் வருடங்கள் முன்பு - தண்ணீர் உருவானது - கடல்
3800 மில்லயன் வருடங்கள் முன்பு  - நிலம் உண்டானது

நீரும் நிலமும் கொண்ட இந்த பூமியில மறுபடியும் விண்கற்கள் தாக்குதல். இப்போ விழுந்த இவை எல்லாம் கடலுக்குள்ள போய் இன்னொரு வேதிப்பொருளை வெளியிட்டது அது - கார்பன். கார்பன் முதல்ல கிடையாது. அப்புறம் தான் வந்தது. வான வெளியில் நடந்த ஒரு மிகப்பெரும் மோதல் அல்லது மிகப்பெரும் வெடிப்பு காரணமாத்தான் இந்த பூமி உருவாச்சி அப்படிங்கறதை மிக சரியாக விளக்கினது BIG BANG THEORY - பெரும் மோதல் தியரம் அல்லது பெரும் வெடிப்பு தியரம் அப்படின்னு சொல்லுவாங்க. இப்போ பூமியில தண்ணி இருக்கு, நிலம் இருக்கு அதோட, நைட்ரஜன், கார்பன் டை ஆக்சைடு மற்றும் கார்பன் எல்லாம் இருக்கு. பூமி உருவான கதை இவ்ளோதான். பரிணாமம் பத்தி படிக்கிற இந்த தொடர்ல முதல் படி கடக்கிறோம்.

இங்க இன்னொரு விசயமும் சொல்ல ஆசைப்படறேன். அது என்னன்னா, இந்த பிரபஞ்சத்துல நம்ம இடம் எது? இந்த பிரபஞ்சம் அப்படிங்கறது எவ்வளவு பெருசு? நம்ம பூமி தவிர வேற என்னவெல்லாம் இருக்கு?

இந்த தகவல்கள் நம்ம தொடருக்கு கொஞ்சம் சம்பந்தம் இல்லாததுன்னாலும் கொஞ்சம் அதிகமா தெரிஞ்சிக்கறது ஒன்னும் தப்பில்லைன்னு நெனக்கிறேன்.
முதல் விஷயம் - நம்ம பிரபஞ்சம் அப்படிங்கறது சூரியன், 9 கோள்கள் அதோட பெயர் தெரியாத விண்கற்கள், நட்சத்திரங்கள், நிலா, நம்ம சூரிய குடும்பம் மாதிரி எத்தனையோ சூரிய குடும்பங்கள் இதுவெல்லாம் சேர்ந்தது. நம்ம பூமிக்கு ஒரு நிலா இருக்கிற மாதிரி, சூரிய குடும்பத்தோட மற்ற கிரகங்களுக்கு நிலா இருக்கான்னு ஒரு சந்தேகம் வந்தது. தகவல்கள் எதுவும் கிடைக்குதான்னு தேடிப்பார்த்தப்போ கிடைச்சது இன்னும் சுவாரஸ்யமான தகவல்கள். நம்ம பூமிக்கு ஒரு நிலா இருக்கிற மாதிரி நம்ம சூரிய குடும்பத்தில் இருக்கிற மற்ற கோள்களில் (சிலதுக்கு மட்டும்) அதுக்குன்னு தனியா நிலா இருக்கு.

1. மார்ஸ் - MARS - செவ்வாய் - 2 நிலாக்கள்
2. ஜுபிடர் - வியாழன் - JUPITOR - 63 நிலாக்கள்   
3. SATURN - சனி - 62 நிலாக்கள் 
4. URANUS - யுரேனஸ் - 27 நிலாக்கள்
5. NEPTUNE - நெப்டியூன் - 13 நிலாக்கள் 

ஓகே.... விசயத்துக்கு வருவோம். சூரியனுடைய ஈர்ப்பு விசைக்கு கட்டுப்பட்டு, ஒரு நீள்வட்டப்பதையில சூரியனை சுத்திவரும் பூமி மற்ற கோள்கள் அதனோட சேர்ந்து தோராயமா 200-400 மில்லியன் நட்சத்திரங்களும், பெயர் தெரியாத கோள்களும், நம்ம சூரிய குடும்பம் மாதிரி எத்தனையோ சூரிய குடும்பங்கள் இப்படி எல்லாம் சேர்ந்தது நம்ம பிரபஞ்சம். இதை MILKEY WAY - பால்வெளி மண்டலம் அப்படின்னு சொல்லுவாங்க.



நம்ம பிரபஞ்சமான பால்வெளி மண்டலத்தோட பரப்பளவு மட்டுமே 120000 ஒளி ஆண்டுகள். நம்ம பிரபஞ்சத்துக்கு மிக அருகில் இருக்கிற பிரபஞ்சம் 1.77 மில்லியன் ஒளி ஆண்டுகள். மிக குறைந்தபட்ச தூரமே இவ்ளோன்னா அப்புறம் மத்ததெல்லாம்? நெனச்சி பார்க்கவே தலை சுத்துது. நம்ம சூரிய குடும்பத்தின் மத்த கோள்கள் பூமியில இருந்து எவ்ளோ தூரம் இருக்கும் ? நான் சொல்றதுலயும் விஷயம் இருக்கு... எவ்வளவோ பிரபஞ்சத்துல நம்மளோடதும் ஒரு பிரபஞ்சம், அதுல இருக்கிற பல இலட்சக்கணக்கான கோள்களில் நம்ம பூமியும் ஒன்னு. அந்த பூமியில எங்கயோ ஒரு புள்ளி நாம.


பூமியில இருந்து மற்ற கோள்களோட தூரம் -

1. புதன் - MERCURY - 57,000,000 மைல்கள்
2. வெள்ளி - VENUS - 23,700,000 மைல்கள்
3. செவ்வாய் - MARS - 35,000,000 மைல்கள்
4. வியாழன் - JUPITER - 500,000,000 மைல்கள்
5. சனி - SATURN - 746,000,000 மைல்கள்
6. யுரேனஸ் - URANUS - 1,687,000,000 மைல்கள்
7. நெப்டியூன் - NEPTUNE - 2,680,000,000 மைல்கள்
8. புஃளூட்டோ - PLUTO - 94.5 மைல்கள்


வானவெளியில் நம்ம பால்வெளி மண்டலம் மாதிரி இன்னும் பல ஆயிரக்கணக்கான பிரபஞ்சங்கள் இருக்கு. அதுல பல நம்ம பிரபஞ்சம் மாதிரியே சூரியன் அதுக்கூட சில கோள்கள் அப்படின்னு ஒரே மாதிரியாவும், பல வேற மாதிரியும் இருக்கு.   யாருக்கு தெரியும் ? அதுல சிலதுல நம்ம மாதிரியே உயிரினங்கள் கூட இருக்கலாம். மற்ற கிரகவாசிகள் பத்தி இதுவரைக்கும் முறையா பதிவு பண்ணப்பட்ட தகவல்கள் எதுவும் கிடையாது. ஆனாலும், அங்க பார்த்தேன்,  இங்க பார்த்தேன்னு நெறைய தகவல்கள், வதந்திகள் உலவுது.



வேற கிரகங்களில் யாரும் இருக்காங்களா (ஒரு வேளை இருந்தால்) அப்படின்னு கண்டுபிடிக்க ஒரு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கு, NASA - நாசா (அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்) மூலமா. அது என்னன்னா, ஒரு செயற்கைகோள்ல பூமி அப்படின்னு ஒரு கிரகத்துல மனிதர்கள் அப்படிங்கிற உயிர்கள் வசிக்கிறதையும், அவங்களை நட்பு வேண்டி தொடர்பு கொள்றவங்க தொடர்பு கொள்ளலாம் அப்படின்னு உலகத்தில் இருக்கிற எல்லா மொழிகள்லயும் பதிவு பண்ணி வானத்தில் ஒலிபரப்பரப்பிட்டு இருக்காங்க ரொம்ப வருசமா. இது இன்னமும் போயிட்டு தான் இருக்கு.



இன்னைக்கு இது போதும்ன்னு நெனக்கிறேன். பூமியை பத்தின விரிவான தகவல்களோட இந்த தொடரின் அடுத்த பகுதியில சிந்திப்போம்.


10 comments:

  1. நல்லதொரு தொடர் ஆரம்பம்... பாராட்டுக்கள்...

    அனைவரும் அறிந்து கொள்ள... முக்கியமாக குழந்தைகளுக்கு மிகவும் உதவும்...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்...!!!!!!!

      Delete
  2. தண்ணீர்,விண்கற்கள் மூலமாதான் பூமிக்கு வந்துதா!ஆச்சர்யம்!

    ReplyDelete
    Replies

    1. நன்றி செழியன் சார்...!!!!!
      உங்களை நம்ம FOLLOWERS லிஸ்ட்ல காணோமே...

      Delete
    2. ஆமா செழியன் சார்...
      தண்ணி நம்ம பூமிக்கு வெளிய இருந்து தான் வந்தது.
      இன்னும் நெறைய சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கு.
      தொடர்ந்து படிங்க...!!!!
      கமெண்ட்ஸ் போடுங்க...!!!!!

      Delete
    3. I changed the following option to private from public. :)

      ( பாஸ் நான் கொஞ்ச நாளுக்கு முன்னதான் பொம்ம கார வச்சி விளையாடுற பழக்கத்த விட்டேன்,
      அவ்ளோ சின்ன பையன் சார் நான்,அதனால அன்பா ஆசையா என்னோட பேர மட்டும் சொன்னா போதும்,சார் எல்லாம் எதுக்கு.)

      நட்புடன் தங்கள் பதிவுகளை பின் தொடரும்-
      செழியன்.

      Delete
  3. Very interesting blog..Very good effort in tamil.

    But I wish to suggest some changes in your article as per the facts:

    1. Life of earth is 4.5 billion years and not 4500 billion years
    2. I undertand that you hint that earth was formed from OUR STAR the SUN. If that is what your communicating, it is not the case. Most parts of the earth were from dead stars.

    ReplyDelete
    Replies
    1. Thank you for your visit and your comment as well.
      I will do that first correction. your second suggestion also correct, But I mentioned in that way only. A meteor broken from sun and it absorbed all the neighboring stars due to its gravitational force and finally it became as earth.

      Thank you very much.

      Delete
  4. The below link might be helpful

    http://library.thinkquest.org/C003124/en/bigbang.htm

    ReplyDelete