Friday, February 22, 2013

ஒருங்கிணைந்த இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு -2013

மக்களே...!!!!

இன்னைக்கு பதிவு ஒரு தகவல். மத்திய அரசுக்கு சொந்தமானதும், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ளதுமான, இந்தியாவின் முதன்மையான முதுகலை மற்றும் ஆராய்ச்சி கல்வி நிறுவனமான இந்திய அறிவியல் கழகம் (INDIAN INSTITUTE SCIENCE) கடந்த 2011 ஆம் வருடத்தில் இருந்து 4 வருட ஒருங்கிணைந்த இளநிலை பட்டப்படிப்புகளை (Integerated Four-Year Bachelor of Science (BS) Program) வழங்கி வருகிறது. இந்திய அறிவியல் கழகம் துவங்கி 100 வருடங்களை (1909-2009) கடந்ததை கொண்டாடும் வகையிலும், பள்ளிப்படிப்பை முடிக்கும் மாணவர்களை நேரடியாக ஆராய்ச்சி துறையில் ஈர்த்து இந்திய மாணவர்களிடம் ஆராய்ச்சிக்கான ஆர்வத்தை ஊட்டுவதற்காகவும், இந்த புதிய பட்டப்படிப்பை இந்திய அறிவியல் கழகம் அறிமுகப்படுத்தியது. இதன்படி,  இந்த படிப்பினை முடிப்பவர்கள் தனியாக முதுகலை பட்டப்படிப்பை படிக்க தேவையில்லை.  இதன்படி இந்த படிப்பிற்கான இந்திய அறிவியல் கழகம் தற்போதைய ஆண்டிற்கான  மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்களை வழங்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


இந்த 4 வருட பட்டப்படிப்பு வருடத்திற்கு இரண்டு பருவங்கள் (SEMESTER) வீதம் மொத்தம் 8 பருவங்களாக வழங்கப்படும். கடைசி வருடத்தின் கடைசி பருவம் முழுக்க முழுக்க ஆராய்ச்சி திட்டமாக இருக்கும். இதன்படி மாணவர்கள் ஒரு சிறிய ஆராய்ச்சி திட்டத்தினை மேற்கொண்டு அதனை முடித்து கொடுக்க வேண்டும். இந்தபடிப்பினை வழங்கும் துறைகள் - உயிரியல் - BIOLOGY, கணிதம் - MATHEMATICS, வேதியியல் - CHEMISTRY, சூழ்நிலையியல் அறிவியல் - ENVIRONMENTAL SCIENCE, மூலப்பொருட்கள் அறிவியல் (தமிழாக்கம் சரியான்னு தெரியல... தெரிஞ்சவங்க சொல்லுங்க ப்ளீஸ்...!!!!!!!) - MATERIAL SCIENCE, இயற்பியல் - PHYSICS. மேற்கண்ட துறையை சம்பந்தப்பட்ட பாடங்களை 11 மற்றும் 12ஆம் வகுப்பில் படித்த அல்லது படித்து முடிக்கப்போகும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் மாணவர்கள் தங்களது பாடதிட்டத்தினை தேர்வு செய்யும்போது தங்களது விருப்பப்படி எந்த துறையிலும் தேர்வு செய்துக்கொள்ளலாம். இது சம்பந்தப்பட்ட முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்க் கிளிக் செய்யவும்.


PUC - இரண்டாம் வருடம் (நம்ம ஊர்ல இது இப்போ வழக்கத்தில் இல்லை) அல்லது 12 ஆம் வகுப்பு ஏற்கனவே (2012) முடித்தவர்கள் அல்லது இந்த வருடம் (2013) முடிக்க இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள். அதனுடன் தனது படிப்பை முதல் வகுப்பில் அல்லது 60% சதவித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இவர்கள் தனது கடைசி வருட (11th & 12th) பாடத்திட்டத்தில் வேதியியல், இயற்பியல் மற்றும் கணிதம் கட்டாயமாகவும், இதனுடன் உயிரியல், கணிப்பொறி அறிவியல், புள்ளியியல், அல்லது மின்னணுவியல் இவற்றில் ஏதாவது ஒன்றையும் படித்திருக்க வேண்டும். 


அதோடு கீழ்க்கண்ட தேர்வுகளில் ஏதாவது ஒன்றினை கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

KVPY:  இது மத்திய அரசின் தொழில் நுட்பத்துறை தேசிய அளவிலான, ஆர்வமுள்ள பள்ளி மாணவர்களை அறிவியல் துறையிலும், ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட படிப்புகளில் ஈர்க்கவும், அதற்கான உதவித்தொகை வழங்க தகுதியுடைய மாணவர்களை தேர்வு செய்யவும் நடத்தும் தேர்வு. இதன் மூலம் தேர்வாகும் மாணவர்கள் இந்தியாவின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் உதவித்தொகையுடன் கூடிய ஆராய்ச்சி திட்டங்களில் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். இது சம்பந்தப்பட்ட மேலதிக தகவல்களுக்கு இந்த லின்கை கிளிக் செய்யலாம்.

இந்த KVPY தேர்வில் சில பிரிவுகள் உண்டு. இந்த பல்வேறு பிரிவுகளின் கீழ் 2011 ஆம் ஆண்டு மற்றும் 2012 ஆம் ஆண்டும் தேர்வு பெற்று உதவித் தொகைக்கு தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி படைத்தவர்கள் ஆவர்.  

  • KVPY-SA [appeared in 2011, and selected for the Fellowship]
  • KVPY-SB [appeared in 2012, and selected for the Fellowship]
  • KVPY-SX [appeared in 2012, and selected for the Fellowship]
  • KVPY Fellows selected through the Empowerment Initiative for SC/ST candidates
  •                                                                (அல்லது) 

  IIT-JEE-Main: Appearing in 2013 and securing a minimum of 60% (GN),     
                        54% (OBC-NCL), 30% (SC/ST/PH).
                                                   (அல்லது)

IIT-JEE-Advanced: Appearing in 2013 and securing a minimum of 60% 
                               (GN), 54% (OBC-NCL), 30% (SC/ST/PH).
                                                   (அல்லது)

NEET-UG: Appearing in 2013 and getting selected in the main merit list. 

மற்ற மூன்று தேர்வுகளும் தேசிய அளவிலான, மத்திய அரசின் அனைத்து IIT - களில் ENGINEERING - தொழில்நுட்ப துறையில் சேர்வதற்கான  நுழைவுத் தேர்வுகளாகும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்கள் மற்றும்  உடல் ஊனமுற்றோருக்கான இடஒதுக்கீடு மத்திய அரசின் விதிகளின் படி வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்கள் இணையத்தின் மூலமே அனுப்பப்பட வேண்டும். இந்த இணைய விண்ணப்பங்களை இந்திய அறிவியல் நிறுவனத்தின் இணைய தளத்தில் காணலாம். இந்த விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி ஏப்ரல் 30. விண்ணப்பத்தின் விலை பொது பிரிவினருக்கு 400/- ரூபாயும், ஊனமுற்றவர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி பிரிவினருக்கு 200/- ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் மாணவர்கள் இந்தியாவின் தலைச்சிறந்த கல்வி நிறுவனத்தில் படிக்கப்போவதோடு, இந்தியாவின் தலைச்சிறந்த பேராசிரியர்கள், விஞ்ஞானிகளோடு பணிபுரியும் வாய்ப்பினையும் பெறுவார்கள். அதோடு பின்னாளில் ஆராய்ச்சி மேற்படிப்புக்கு அங்கேயே விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு தேவையான முன்னுரிமையும் அளிக்கப்படும். ஸோ, மக்களே...!!!!!!! ஆர்வமிருக்கறவங்க இந்த படிப்புக்கு விண்ணபிக்கலாம் அல்லது உங்களுக்கு தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்க. அடுத்த பதிவுல சிந்திப்போம்.  


No comments:

Post a Comment