Showing posts with label நன்றி. Show all posts
Showing posts with label நன்றி. Show all posts

Saturday, July 27, 2013

ஒரு வேண்டுகோள்...!!!


நண்பர்களே...!!!

அடுத்த பதிவுக்கு தயார் ஆகிட்டு இருக்கேன். அதுக்கு நடுவுல நம்ம நண்பர்கள் எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள். நம்ம வலைப்பூவை பின்தொடர்பவர்களிலும், உயிர்நுட்பம் FACE BOOK கணக்குல இருக்கிற நண்பர்களிலும் நெறைய ஆசிரியர்கள் இருக்கறதால இந்த வேண்டுகோளை கேக்கலாம் அப்படின்னு தோணுச்சி. 

முதல்ல இது நாள் வரை நீங்க நம்ம வலைப்பூவுக்கு குடுத்த ஆதரவுக்கு நன்றி. 

உயிர்நுட்பம்  தொடங்கின புதுசுல படிக்கிற வாசகர்கள்ல பெரும்பாலானவர்கள் வெளிநாட்டுல இருந்து படிக்கிறவங்களா தான் இருந்தாங்க. நான் எழுதறதையும் நெறைய பேர் படிக்கிறாங்க அப்படின்னு சந்தோசம் ஒரு பக்கம்  இருந்தாலும், அப்போ எனக்கு கொஞ்சம் வருத்தமாவும் இருக்கும். ஏன்னா, நான்  இந்த வலைப்பூ எழுதத் தொடங்க ஒரு முக்கியமான காரணம், ஆங்கிலத்தில் சரியான வாசிப்பு திறன் இல்லாத தமிழ் வழி வந்த மாணவர்களுக்கு இந்த வலைப்பூ உதவியா இருக்கும்   அப்படின்னு தான்.    ஏன்னா,  நானும் தமிழ் வழி பள்ளியில் இருந்து வந்து, கல்லூரியில் ஆங்கிலம் படிக்க முடியாமல் தடுமாறியவன். முறையான தமிழ் வழிப் புத்தகங்கள் இல்லாமல், ஆங்கிலமும் புரியாமல் எவ்வளவோ கஷ்டப்பட்டவன்.  இது நடந்தது 2001-ஆம் வருஷம். ஆனா, இத்தனை வருடங்கள் கடந்தும், இப்பவும் ஒரேயொரு சரியான தமிழ் வழி புத்தகம், மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கிடையாது. அதனால, வலைப்பூ ஆரம்பிச்சி உயிரியல் எழுதலாம்னு முடிவானதும், தயக்கமே இல்லாமல் அதை தமிழ்ல தான் எழுதறதுன்னு முடிவு செய்தேன்.

இப்போ, நெறைய ஆசிரியர்களும் நம்ம வலைப்பூவை படிக்கிறதால, நீங்க உங்க மாணவர்களுக்கு குறிப்பா தமிழ் வழிமாணவர்கள் இருந்தா, அவங்க எல்லாருக்கும் இந்த வலைப்பூவை அறிமுகப்படுத்தனும் அப்படின்னு கேட்டுக்கறேன். ஆசிரியர்கள் அப்படின்னு இல்லை, நம்ம நண்பர்கள் எல்லாரும், நம்ம வலைப்பூவையும், உயிர்நுட்பம் FACE BOOK பக்கத்தையும் உங்க நண்பர்கள் எல்லாருக்கும் அறிமுகப்படுதினிங்கன்னா, அப்படியே ஒவ்வொருத்தரா சேர்ந்து இன்னும் நெறையப் பேருக்கு போய் சேரும். என்னோட நோக்கமும் நிறைவேறும். நண்பர்கள் இதை கண்டிப்பா செய்வீங்கன்னு நெனக்கிறேன். நம்பறேன். 




நண்பர்கள் எல்லாருக்கும், உங்க ஆதரவுக்கும், வரவேற்புக்கும் மிக்க நன்றி.  


NOTE: இந்த பதிவை வாசகர்கள் எவ்வளவு நாள் கழித்து படித்தாலும், பின்னூட்டம் போட தவற வேண்டாம். FACE BOOK பக்கத்திலும் இந்த பதிவுகள் காணக்கிடைக்கும்.

Saturday, June 22, 2013

நன்றியும் மகிழ்ச்சியும்...!!!

நண்பர்களே...!!!
 
 
 
 
நம்ம உயிர்நுட்பம் FACE BOOK கணக்குல இன்னைக்கு சேர்ந்த திரு. ராஜையா சின்னதுரை அவர்களோட சேர்ந்து நண்பர்கள் எண்ணிக்கை 50- ஐ தொடுகிறது. மிக்க மகிழ்ச்சி, அந்த மகிழ்ச்சியை உங்களோட பகிர்ந்துக்கறேன். எந்த ஒரு குறிக்கோளும், எதிர்ப்பார்ப்பும் இல்லாம விளையாட்டுத்தனமா  ஆரம்பிக்கப்பட்டதே நம்ம உயிர்நுட்பம் வலைப்பூ. ஒரு வழியா, உயிரியல் பத்தி எழுதலாம்னு முடிவு பண்ணி நான் எழுத ஆரம்பிக்கும் போது இதையெல்லாம் யாரு படிப்பா அப்படிங்கற அவநம்பிக்கையோட தான் எழுத ஆரம்பிச்சேன். ஆனா, இன்னைக்கு தினமும் குறைஞ்சது இருநூறு வாசகர்கள் படிக்கிற ஒரு அறிவியல் வலைப்பூ நம்மளோடது. 63 நேரடி பின்தொடர்பவர்கள், 50 நண்பர்கள் FACEBOOK கணக்குல, அது மட்டும் இல்லாம தொடர்ந்து உள்ளூர்ல இருந்தும், வெளிநாடுகள்ல இருந்தும் நான் எழுதினாலும், இல்லைன்னாலும் தொடர்ந்து வருகை தர்ற வாசக நண்பர்கள். அதோட எனக்கு தெரிஞ்ச அளவுக்கு தமிழ்ல, முழுமையா உயிரியல் பத்தி மட்டும் எழுதப்படற ஒரே ஒரு வலைப்பூ நம்ம உயிர்நுட்பம் மட்டும் தான். இந்த பெருமை எல்லாம் உங்க தொடர் ஆதரவுனால மட்டுமே சாத்தியமாச்சி. ஸோ, நம்ம வாசக நண்பர்கள் எல்லாருக்கும் மகிழ்ச்சியும், நன்றியும்.
உங்க ஆதரவை தொடர்ந்து எதிர்ப்பார்க்கிற - உயிர்நுட்பம்.

Monday, February 4, 2013

சில சுவாரஸ்யங்கள்: கோழி முட்டையின் அறிவியல் பூர்வமான கட்டமைப்பு - 2

மக்களே...!!!

DR. DOLITTLE நம்ம வலைப்பூவை தொடர்ந்து படிக்கிற வாசகர். இவர் ஒரு மிருக நல டாக்டரும் கூட. நன் எழுதறதை படிச்சிட்டு தன்னோட கருத்துக்களையும், தனக்கு தெரிஞ்ச புது விசயங்களையும் அப்பப்போ சொல்லுவார். நல்ல மாட்டுக்கு ஒரு ஊசி அப்படிங்கற பேர்ல ஒரு வலைப்பூவை எழுதிட்டு இருக்கார். நம்மளோட வலைப்பூவில வந்த கோழி முட்டை - அறிவியல் பூர்வமான கட்டமைப்பு  பதிவு படிச்சிட்டு சில மேலதிக சுவாரஸ்யமான தகவல்களை கமெண்ட்ல சொல்லியிருக்கார். நன்றி டாக்டர்...!!! அவர் சொன்ன சில விஷயங்கள் சுவாரஸ்யமாவும் இருந்ததால அதையும் ஒரு பதிவா போடலாம்னு தோணுச்சி. ஸோ, இன்னைக்கு பதிவு டாக்டர் சொன்ன தகவல்கள் தான். வாங்க இன்னைக்கு பதிவுக்கு போகலாம்.  

 தகவல் - 1

மனிதர்கள்ல பெண்களில் பாலின குரோமோசோம்கள் ஒரே மாதிரி இருக்கும். அதாவது XX. இதை HOMOGAMETIC - ஹோமோகேமிடிக் அப்படின்னு சொல்வாங்க. அதுவே ஆண்களின் பாலினம் சம்பந்தப்பட்ட குரோமோசோம்கள் XY. இதை HETEROGAMETIC - ஹெடிரோகேமிடிக் அப்படின்னு சொல்வாங்க. ஸோ, பிறக்கும் குழந்தையின் பாலினம் ஆணின் குரோமோசோம் பிரிதலை பொறுத்தே அமையும். கொஞ்சம் விளக்கமா வேணும்ன்னா நம்ம பழைய பதிவு ஒன்னு ரொம்ப விளக்கமாவே எழுதியிருக்கேன். அதை படிச்சி தெரிஞ்சிக்கலாம். அதுவே பறவைகள் இனத்தில் தலைகீழ். இங்க ஆண்தான் ஹோமொகேமிடிக். பெண் ஹெடிரோகேமிடிக். புதியதா உருவாகும் குட்டி பறவை ஆணா பெண்ணான்னு பெண் தாய் பறவையின் குரோமோசோம் பிரிதலை பொறுத்தே அமையும். 


                              (படத்து மேல கிளிக் பண்ணி பெருசாக்கி பார்க்கலாம்)


தகவல் - 2

ரெண்டாவது தகவல், இன்னும் கொஞ்சம் வித்தியாசமானது. மனிதர்களில் செல்களில் உருவாகும் கழிவு பொருள்களை வெளியேற்றுவதில் முக்கியமான வழி சிறுநீர் உருவாக்கி அது மூலமா வெளியேற்றுவது. மனித செல்கள் எல்லா கரிம வேதிப்பொருள்களை உபயோகப்படுத்திட்டு மிஞ்சியவற்றை கண்டிப்பா வெளியேத்தணும். அப்படி வெளியேத்த மீதி இருக்கிற கரிம வேதிப்பொருள்களை யூரியா - UREA அப்படிங்கற கரிம வேதிப்பொருளா மாத்தி அதை அப்படியே ரத்தத்துல கலக்கவிடும். அப்படி கலக்கிற யூரியா சிறுநீர் பிரியும் போது சிறுநீர்ல கலந்து சிறுநீர் வழியா வெளியேற்றப்பட்டு விடும். இதை வீடியோல நீங்க பார்க்கலாம். 



ஆனா, பறவைகள்ள இது வழக்கம் இல்லை. பறவை செல்கள் வெளியேற்றும் யூரியா அப்படியே வெளியேற்றப்படுவதில்லை. அதை அப்படியே URIC ACID - யூரிக் ஆசிட்டாக மாற்றப்பட்டு அதை அப்படியே வெளியேற்றிடும். பறவைகளில் தனியா சிறுநீர் அப்படின்னு ஒன்னு உருவாகறதில்லை. 

இதுக்கு என்ன காரணம் ? யூரியா சிறுநீர்ல வெளியேற்றனும் அப்படின்னா, அது தண்ணியில கரைக்கப்பட்டு அப்புறம்தான் சிறுநீரா வெளியேறும். யூரியா தண்ணியில கரையனும் அப்படின்னா  நிறைய அளவு தண்ணி வேணும். மனித உடல்ல அதுக்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. ஏன்னா மனித உடல்ல நிறைய தண்ணி இருக்கு. ஆனா, பறவையின் உடல்ல அவ்வளவு தண்ணி எதிர்ப்பார்க்க முடியாது. பறவை செல்கள் உருவாக்கும் யூரியாவை அப்படியே சிறுநீர் வழியா வெளியேத்தினா பறவை தன்னோட சாதாரண வேலைக்கு கூட தண்ணி பத்தாம செத்து போயிடும். 

தகவல் - 3

இது முட்டை பத்தின விஷயம் தான். கோழியோட முட்டை மட்டும் இல்லை, எல்லா பறவைகளோட முட்டையோட வடிவம் பத்தி உங்களுக்கு தெரியும். ஒரு பக்கம்  குறுகலான முனையும், மறுப்பக்கம் கொஞ்சம் பெரிய வடிவமும் இருக்கும். இதுக்கும் ஒரு காரணம் இருக்கு. ஒரு கோழியோட முட்டையை எடுத்து தரையில உருட்டி விட்டு பாருங்க. அது உருட்டி விட்ட இடத்திலேயே தான் சுத்தி சுத்தி வருமே தவிர உருண்டு உங்களை விட்டு தூரமா போகாது. அதுக்கு காரணம் இந்த ஸ்பெஷல் வடிவம்தான் காரணம். 

அவ்ளோதான் மக்களே...!!! படிங்க. பின்னூட்டம் போடுங்க. இந்த தகவல்களை சொன்ன டாக்டருக்கு மறுபடியும் ஒரு பெரிய நன்றி. மறுபடியும் அடுத்த பதிவுல சிந்திப்போம்.










Wednesday, July 25, 2012

இன்னைக்கு நான் ஒரு சந்தோசமான விஷயத்தை உங்களோட பகிர்ந்துக்க போறேன்...!!!

மக்களே...!!!

                                  

இன்னைக்கு நான் ஒரு சந்தோசமான விஷயத்தை உங்களோட பகிர்ந்துக்க போறேன்...!!!

நம்ம உயிர்நுட்பம் வலைப்பூ வெற்றிகரமா ஐந்தாயிரம் கவுண்ட்ஸ் கடந்திருக்கு. பிரபலமான பல வலைபூக்கள் மத்தியில இது பெரிய விஷயம் இல்லைதான். ஆனாலும், அறிவியல் பத்தி எழுதற வலைப்பூவுக்கு, அதுவும் ஆரம்பிச்சி நாலே  மாசம் ஆன வலைப்பூவுக்கு இது கண்டிப்பா பெரிய விஷயம். 

இதுக்கு எல்லாம் இந்த வலைப்பூவுக்கு தொடர்ந்து நீங்க குடுக்கற ஆதரவு தான் காரணம். இதே ஆதரவை நான் உங்ககிட்ட இருந்து தொர்ந்து எதிர்ப்பார்க்கிறேன். அதோட என்னோட எழுத்துல இருக்கிற நிறை குறைகளை கண்டிப்பா சுட்டி காட்டுங்க. மாத்திக்கறேன்.

இந்த சந்தோசமான தருனத்தில நம்ம வலைப்பூவுக்கு ஒரு நல்ல அறிமுகத்தை வாசகர்கள் மத்தியில ஏற்படுத்தி குடுத்த ஜாக்கி அவர்களுக்கும், கேபிள் சங்கர் அவர்களுக்கும், இன்னொருத்தர் இருக்கார்... சதிஸ் மாஸ்... என்னோட வலைப்பூவுக்கு லிங்க் எல்லாம் குடுத்து அவரும்  நம்ம வலைப்பூவுக்கு அறிமுகம் ஏற்படுத்தி குடுத்தார். ஸோ, சதீஷ் மாஸ் அவர்களுக்கும், இன்னொரு முக்கியமான ஒருத்தர் நல்ல மாட்டுக்கு ஒரு ஊசி அப்படிங்கற பேர்ல எழுதற டாக்டர் டூ லிட்டில். இவரும் பயாலாஜி தெரிஞ்சவர் அப்படிங்கறதால இவரோட ஆலோசனைகள் எனக்கு ஒரு பெரிய பலம். இவருக்கும் என்னோட நன்றிகளை தெரிவிச்சிக்கறேன். 

இந்த நாலு மாசத்தில நம்ம வலைப்பூ ஐந்தாயிரம் கவுண்ட்ஸ், இன்டலியில 13 பின்தொடர்பவர்கள், 28 நேரடி பின்தொடர்பவர்களோட ஒரு நல்ல நிலைமையை அடைய மேல சொன்னவங்க மிக மிக முக்கியமான காரணம். 

அப்புறம் நான் நன்றி சொல்ல வேண்டியவங்க நம்ம பின்தொடர்பவர்கள். இவங்களோட கமெண்ட்ஸ், ஒரு அறிவியல் பத்தின  வலைப்பூவுக்கு இவங்க தொடர்ந்து குடுக்கிற ஆதரவு என்னை சோர்ந்து போகாம எழுத செய்யிது. நான் எழுதறனோ, எழுதலையோ, தினமும் வந்து பார்த்திட்டு போற இவங்களுக்காகவாவது எழுதணும் அப்படிங்கற எண்ணம் நம்ம வலைப்பூவை ஒரு நல்ல இடத்துக்கு கொண்டு வந்திருக்கு. அதே போல நெறைய பேரு பின்தொடர்பவர்கள் இல்லன்னாலும், நம்ம வலைப்பூவை தினமும் வாசிக்கறாங்க அப்படிங்கறதையும் புரிஞ்சி தான் வெச்சிருக்கேன். ஸோ... மக்களே...!!! எல்லாருக்கும் என்னோட நன்றிகள்.

தொடர்ந்து படிங்க. பல புதிய பகுதிகள், புதிய விசயங்களோட பதிவுகள் அப்படின்னு இன்னும் நல்ல, பயனுள்ள வலைப்பூவை உங்களுக்கு கொடுக்க என்னாலான எல்லாத்தையும் செய்யிறேன். இந்த நாளை, சந்தோசமா நண்பர்களுக்கு இனிப்பு குடுத்து கொண்டாட போறேன். நீங்களும் கலந்துக்கோங்க. அடுத்த பதிவுல சிந்திக்கலாம். 

Sunday, April 15, 2012

எனது நன்றிகள்...!!!

நண்பர்களே, 

நம் வலைப்பூவிற்கு மேலும் சில நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். அதில் சிலர், பனித்துளி சங்கர், பன்னிக்குட்டி ராமசாமி மற்றும் நாடோடி பையன் போன்றவர்கள் இணையத்தில் நன்றாக அறியப்படுபவர்கள். தனக்கென தனி இடத்தை பிடித்தவர்கள். அவர்களை வரவேற்போம். 

இந்த சிறுவனின் வலைப்பூவிற்கு, வருகை புரிந்தது மற்றும் இல்லாமல், நம்மிடையே நண்பர்களாகவும் இணைந்ததற்கு எனது நன்றிகள்.  

என்றென்றும் உங்களின் ஆதரவை நாடும்,
உயிர்நுட்பம்

Thursday, April 12, 2012

உடலும் அதன் உறுப்புகளும் ஒரு அறிமுகம் - 1

வணக்கம் மக்களே!!!

என்னோட போன பதிவுக்கு ஒரு பாலோவர் சேர்ந்திருக்காருன்னு இன்ட்லியில் இருந்து எனக்கு ஒரு மெயில் வந்திருக்கு... :-) அவருக்கு என்னோட வரவேற்பு மற்றும் வணக்கம். இந்த ப்ளாக் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே, உயிர் வேதியியலை நமது தமிழில் உங்களுக்கு அறிமுகப்படுத்துவதேன்னு இப்போ உங்களுக்கு புரிஞ்சிருக்கும்.

அதனால, இதை படிக்கிறவங்க எனக்கு பின்னூட்டம் போடுங்க, ஒட்டு போடுங்கன்னு எல்லாம் நான் கேக்க மாட்டேன். உங்களுக்கு தெரிஞ்ச ஒன்னு ரெண்டு மாணவர்களுக்கு, இல்லை இந்த துறையில் ஆர்வமுள்ள ரெண்டு பேருக்கு அறிமுகப்படுத்துங்க. அது போதும். 

என்னோட ப்ளாக் www.uyirnutpam.blogspot.com

ஆனா, இன்ட்லியில அபிராமியின் பக்கங்கள் அப்படிங்கற பேர்ல தான் சேர்ந்திருப்பேன். அது ஒரு வேற காரணம். அதனால, மக்கள் என்னோட பதிவுகள மேல இருக்கற ப்ளாக்ல பார்க்கலாம். போன பதிவுல செல்ல பத்தி தெரிஞ்சிக்கிட்டோம். ஆனா இன்னும் சொல்ல வேண்டியது எவ்வளவோ இருக்கு. இருந்தாலும் அடிப்படைக்கு இது இப்போதைக்கு போதும். 

அதேமாதிரி, நம்மளோட உடலையும், உறுப்புகளையும் அதன் செயல்பாடுகளையும் அதற்கான அதன் தேவைகளையும் நாம தெரிஞ்சிக்கணும். அப்போ தான் நான் மேல மேல, புதுப்புது விஷயங்கள் சொல்லும் போது உங்களுக்கு புரியும்.

நம்ம உடல் பல விதமான உறுப்புகளால் கட்டமைக்கப்பட்டது நமக்கு நல்லா தெரியும். ஆனா ஒவ்வொரு உறுப்பும் தனி தனி விதமான செல்களால் ஆனதுன்னு உங்களுக்கு தெரியுமா..? உதாரணத்துக்கு கல்லீரல் செல்கள் இதயத்தில் இருக்காது. நமது உடல் சதை செல்கள் தோலில் இருக்காது. நரம்பு செல்கள் வேற விதமானதுன்னு போன பதிவிலேயே சொல்லியிருக்கேன்.


இதற்கு காரணம் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு விதமான வேலையை செய்யிறது தான். உதாரணம், இதயம் நாள் முழுதும் துடிக்க வேண்டியது  மட்டும் இல்லை, ஒரு நாளைக்கு 150  லிட்டர் ரத்தத்தை உடல் முழுதுமா செலுத்தனும். அவ்வளவு பெரிய வேலையை செய்யிற இதயம் சாதரணமா இருக்க முடியுமா...? அதனால இதயம் கடினமான செல்களால் நெருக்கமா கட்டமைக்கப்பட்டிருக்கும். நான் வெஜ் சாப்பிடும் அன்பர்கள் இதயத்துக்கும், உடலின் மற்ற பகுதிக்கும் கண்டிப்பா வித்தியாசம் உணர்ந்திருப்பிங்க. அதுவே நுரையீரல் (lungs) பகுதி தெர்மாகோல் மாதிரி சாப்ட்டா இருக்கறதுக்கு காரணம் அது நம்ம மூச்சு விடும்போது நெறைய சுருங்கி விரிய வேண்டியிருப்பதால் தான்.


இதில் இதயம் மற்றும் நரம்பு செல்களுக்கும் மற்ற உடல் உறுப்பு செல்களுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு. அதாவது நம்ம உடம்புல எங்க அடிப்பட்டு காயம் ஏற்பட்டாலும் நமக்கு கொஞ்ச நாள்ல சரியா போயிடும். அதுக்கு காரணம் அடிப்பட்டு இறந்து போற செல்களுக்கு பதிலா புதிய செல்கள் உருவாவது தான். அந்த செல்களுக்கு தானே இரண்டாக பிரிந்து புதிய செல்களை உருவாக்கும் தன்மை உண்டு. அதுவே இதயத்திலோ அல்லது நரம்பு மண்டலத்திலோ (மூளை உட்பட ) அடிப்பட்டு செல்கள் இறந்து போனா அவ்ளோ தான். அந்த காயம் ஆறாது. காரணம் நரம்பு செல்களும் இதயத்தில் இருக்கற செல்களுக்கும் தானே பிரிந்து புதிய செல்களை உருவாக்கும் தன்மை இல்லை. (என்ன ஒரு இயற்கையின் படைப்பில் உள்ள வினோதம்!!!!!!) அந்த உயிர் காயத்தின் தன்மையை பொறுத்து இறந்து போன செல்களின் சதவிதத்தை பொறுத்து உயிரோடு இருப்பதோ, இறந்து போவதோ நடக்கும்.

இந்த காரணத்தினால தான், இயற்கை இதயத்தை விலா எலும்புகளும் மூளை மண்டை ஓடும் வெளிப்புறமா சூழ, அதற்கும் உள்ளே, ஒரு விதமான நீர் நிரம்பிய பை மாதிரியான அமைப்புக்குள்ள, ரொம்ப பாதுகாப்பா அமைச்சிருக்கு.  இந்த நீர் நிரம்பிய பை தான் நாம ஓடும்போதும், தவறி கீழ விழுந்தாலும், குதிச்சாலும், வெளிய இருந்து எந்த விதமான அதிர்வுகளும் இந்த உறுப்புகளை பாதிக்காம பாதுகாக்குது. பைக்குக்கு சஸ்பென்சன் மாதிரி.

நம்ம உடம்பு ரொம்ப சுயநலம் கொண்டது. அதற்கு ஒரே தேவை உயிர் வாழனும். இனப்பெருக்கம் மத்தது எல்லாம் அதற்கு அப்புறம் தான். உதாரணம் சொல்லனும்னா, திடீர்ன்னு வெளிய இருந்து வர உணவு நின்னு போச்சி. அதாவது நீங்க ஒரு மாசம் பட்டினியா இருக்க முடிவு பண்ணிட்டிங்க. அப்போ நம்ம உடல் என்ன பண்ணும்? மொதல்ல அங்க அங்க சேர்த்து வெச்சது உபயோகபடுத்தும். அப்பவும் வெளிய இருந்து எதுவும் வரல. என்ன நடக்கும் தெரியுமா....? உயிர் வாழ தேவையான உறுப்புகள் தவிர மீதி இருக்கும் விரல்கள், கை கால்  அதுக்கெல்லாம் உணவு சப்ளையை அதிரடியா நிறுத்திடும். அந்த உறுப்புகள் செத்து போனாலும் போனா போகட்டும்ன்னு விட்டுடும். நல்லா இருக்கு இல்லை?

இப்போதைக்கு இது போதும். மீதி அடுத்த பதிவுல...!!!!!!!